சென்னை வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல - Indian Military Veterans




Capt KS Ramaswamy
Editor
Indin Military Veterans


Featured Post

RTI: File Guide for the Indian Army

Indian Military Veterans RTI: File Guide for the Indian Army  What is RTI? What is the full format of RTI?    RTI stands for Right to Inf...

Feb 2, 2016

சென்னை வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல

சென்னை வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கையில் தகவல் பதிவு செய்த நாள்: பிப் 02,2016 20:26 எழுத்தின் அளவு: (4) புதுடில்லி: சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்புக்கு அதிகபட்ச மழை காரணமல்ல என மத்திய புவியியல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 2015 நவ., முதல் டிசம்பர் வரை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், நீர்நிலையை ஆக்கிரமிக்காமல், முறையாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்த வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. சென்னையை பேரிடர் பகுதியாக அறிவித்த தமிழக அரசு, இந்த பாதிப்பை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து , மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. செம்பரப்பாக்கம் ஏரி திறப்பில் ஏற்பட்ட குளறுபடியே இந்த பாதிப்புக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். ஆனால், தமிழக அரசு இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் 2015க்கான பருவநிலை அறிக்கையில், சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல: மோசமான வடிகால் வசதிகள், செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டதே காரணம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழக அரசிற்கு ஸ்டாலின் கேள்வி : தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சமூக வலைதளம் ஒன்றில் வௌியிட்ட செய்தியில், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு திடீர் கனமழை தான் காரணம் என அதிமுக அரசு பொய் சொல்கிறது என நான் கூறியதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், 48 மணி நேரத்திற்கு முன்பே, கனமழை பெய்யும் என தமிழக அரசிற்கு எச்சரிக்கை செய்தும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அது தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என வெளிப்படையாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசின் பொய்யை தகர்த்துவிட்டது. இது இயற்கை பேரழிவு அல்ல என்ற உண்மை வெளிவந்துள்ளது. அதிமுக அரசு உருவாக்கிய செயற்கை பேரிடர் இந்த மழை வெள்ள பாதிப்பு என திமுக கூறியது நிருபணம் ஆகியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிக்கைக்கும், தன் தோல்விக்கும் அதிமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது. உண்மையை மக்களுக்கு அறிவிக்க உடனடியாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Indian Military Veterans Viewers, ..

Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.

Note:

1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.

- INDIAN MILITARY VETERANS- ADMIN

LATEST NEWS

Post Top Ad